Categories
தேசிய செய்திகள்

சிறுமியை சீரழித்த வேன் டிரைவரின் வீடு…. அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை…. பரபரப்பு…!!!!!

மத்தியபிரதேசம் மாநிலம் போபால் மாவட்டத்திலுள்ள தனியார் பள்ளியில் 3 வயது சிறுமி நர்சரி வகுப்பு படித்து வருகிறார். அச்சிறுமி கடந்த வியாழக்கிழமை பள்ளிக்கு சென்று விட்டு வீடு திரும்பியுள்ளார். அவ்வாறு பள்ளியிலிருந்து வீடிதிரும்பிய சிறுமியின் உடை மாற்றப்பட்டிருந்தது. மாற்று உடையை யாரோ சிறுமிக்கு அணிந்து அனுப்பியுள்ளனர். இதன் காரணமாக சந்தேசமடைந்த சிறுமியின் தாயார் இது தொடர்பாக பள்ளி நிர்வாகத்திடம் கேட்டுள்ளார். அதற்கு பள்ளியில் வைத்து சிறுமியின் உடையை யாரும் மாற்றவில்லை என கூறியுள்ளனர். இந்நிலையில் சிறுமிக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து சிறுமியை மருத்துவமனைக்கு கொண்டு சென்று பரிசோதித்துள்ளனர்.

அந்த பரிசோதனையில் சிறுமி பாலியல் வன் கொடுமை செய்யப்பட்டதற்குரிய தடயங்கள் இருந்துள்ளது. இவ்வாறு தன் மகள் பாலியல் வன் கொடுமை செய்யப்பட்டுள்ளார் என்பதை அறிந்து அதிர்ச்சியடைந்த தாயார் இதுபற்றி சிறுமியிடம் கேட்டுள்ளார். அப்போது அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அதாவது அச்சிறுமியை பள்ளி வேன்டிரைவர் பாலியல் வன் கொடுமை செய்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக சிறுமியின் தாயார் காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் பள்ளி வேன் டிரைவரை கைது செய்தனர். அத்துடன் பள்ளி வேனில் பணிபுரிந்த பெண் ஊழியரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.

இந்நிலையில் ஷாபுரா பகுதியில் அமைந்த பள்ளி வேன் ஓட்டுனரின் வீட்டை காவல்துறையினரின் கண்காணிப்பின் கீழ் அதிகாரிகள் இடித்துதள்ளினர். சட்டவிரோத கட்டுமானம் எனக்கூறி அதிகாரிகள் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர். இது தொடர்பாக உள்துறை மந்திரி நரோட்டம் மிஷ்ரா கூறியதாவது, குற்றவாளிகள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த அதிர்ச்சிக்குரிய விவகாரம் வெளியே தெரிந்துவிடாமல், மூடி மறைப்பதற்கு பள்ளி நிர்வாகம் முயன்றுள்ளது என்று நான் உறுதியாக நம்புகிறேன்.

தேவைப்பட்டால் பள்ளி நிர்வாகத்திடம் காவல்துறையினர் விசாரணை நடத்துவார்கள். அவர்களுக்கு எதிராகவும் விசாரணை துவங்கும் என கூறியுள்ளார். மேலும் இதுபற்றி காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஹீனா கவாரே கூறியதாவது, சிவராஜ் சிங் சவுகான் அரசு பொறுப்பற்ற முறையில் நடந்துகொள்கிறது. சட்டங்கள் இயற்றுவது மட்டும் உதவாது. அதை முறையாக நடைமுறைபடுத்த வேண்டியது அவசியம் ஆகும். இந்த விசயத்தில் ஆளும் அரசு அலட்சியமுடன் இருக்கிறது. இதனை சட்ட சபையில் நாங்கள் எழுப்புவோம் என்று கூறியுள்ளார்.

Categories

Tech |