Categories
தேசிய செய்திகள்

போலீஸ் அதிகாரியின் கண்மூடித்தனமாக நம்பிக்கை…. பெற்ற மகளுக்கு சாமியாரால் அரங்கேறிய கொடூரம்… உச்சக்கட்ட பரபரப்பு….!!!!

மும்பையை சேர்ந்த போலீஸ் அதிகாரி ஒருவருக்கு 12 வருடங்களுக்கு முன்பு வெர்சோவா பகுதியை சோ்ந்த சாப்ட்வேர் நிறுவன மேலாளர் சுரேஷ்குமார் அவஸ்தி (58) என்பவர் அறிமுகம் ஆனார். இதில் சுரேஷ்குமார் அவஸ்தி தன்னை சாமியார் எனக்கூறி வந்தார். அதுமட்டுமின்றி விடுமுறை நாட்களில் வீட்டில் பூஜைசெய்து வந்ததாக கூறப்படுகிறது. இதனிடையில் சுரேஷ்குமாரை அந்த போலீஸ் அதிகாரி கண்மூடித் தனமாக நம்பி இருக்கிறார். எனினும் போலீஸ் அதிகாரியின் மனைவிக்கு அந்த சாமியார் சுரேஷ்குமார் மீது சந்தேகம் எழுந்துள்ளது. இதனால் கணவரிடம் அவர் சாமியாரை சந்திக்கவேண்டாம் என அறிவுரை கூறி இருக்கிறார்.

இருப்பினும் மனைவியின் பேச்சை அவர் காது கொடுத்து கேட்கவில்லை. அத்துடன் மனைவியிடம் சண்டை போட்டு விட்டு சாமியாரின் வீட்டு பூஜைகளுக்கு சென்று வந்துள்ளார். இந்நிலையில் சென்ற 2019 ஆம் வருடம் போலீஸ் அதிகாரி அவரது 17 வயது மகள், மகனை சாமியாரின் வீட்டுக்கு பூஜைக்கு தனியாக அனுப்பி இருக்கிறார். அப்போது சாமியார் பூஜை சாமான் வாங்கி வரச் சொல்லி சிறுவனை வெளியே அனுப்பியுள்ளார். அதன்பின் அவர் பிரசாதத்தில் மயக்க மருந்து கலந்துகொடுத்து சிறுமியை கற்பழித்துள்ளார்.

அதனை தொடர்ந்து சிறுமி மயக்கம் தெளிந்தபோது, தனக்கு கடவுள்களின் சக்தியிருப்பதாக சாமியார் கூறியுள்ளார். அதுமட்டுமல்லாமல் நீ எனக்காக பூமிக்கு அனுப்பி வைக்கப்பட்டவள் என சினிமா வசனங்களை சிறுமியிடம் கூறியுள்ளார். இதேபோன்று நடந்ததை வெளியே கூறினால் தனக்கு இருக்கும் சக்தியை பயன்படுத்தி உன் குடும்பத்தை அழித்துவிடுவதாகவும் மிரட்டியிருக்கிறார். இதன் காரணமாக சிறுமி நடந்ததை வெளியே கூறவில்லை. இதனை சாதகமாக பயன்படுத்திய சாமியார் கடந்த 3 வருடங்களாக சிறுமியை சீரழித்து வந்துள்ளார்.

இந்நிலையில் அண்மையில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்தின்போது சாமியார், போலீஸ் அதிகாரியின் வீட்டுக்கு சென்றுள்ளார். அங்கு பூஜைக்காக தனிஅறைக்கு மகளை அனுப்புமாறு போலீஸ் அதிகாரியின் மனைவியிடம் அவர் கூறியுள்ளார். ஆனால் இதற்கு போலீஸ்அதிகாரியின் மனைவி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனால் கோபமடைந்த சாமியார் போலீஸ் அதிகாரியின் மனைவியை அவதூறாக பேசிவிட்டு அங்கிருந்து சென்றுள்ளார். இந்த சூழ்நிலையில் அதிகாரியின் மகள் தனக்கு நடந்த கொடுமையை பற்றி தாயிடம் கூறி கதறி அழுதார்.

இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த தாய் சம்பவம் தொடர்பாக காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதன்படி போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சுரேஷ்குமார் அவஸ்தியை கைது செய்தனர். அத்துடன் அவர் இதே பாணியில் வேறு எந்த பெண்ணையும் கற்பழித்தாரா என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சுரேஷ்குமார் அவஸ்தியை போல் போலி சாமியாரிடம் சிக்கி அவஸ்தைப்பட்ட பெண்களின் கதையை கேள்விப்பட்டு இருக்கலாம். ஆனால் போலீஸ் அதிகாரியான சொந்த தந்தையின் கண்மூடித் தனமான நம்பிக்கையால் போலி சாமியாரிடம் சிக்கி 17 வயது சிறுமி சீரழிந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |