இந்திய மல்டிபிளக்ஸ் தியேட்டர் சங்கம் வரும் 16ம் தேதியை தேசிய சினிமா தினமாக அறிவித்திருந்தது. அன்று இந்தியா முழுவதும் உள்ள சுமார் 4000 multiplex தியேட்டர்களில் டிக்கெட் கட்டணம் 75 ரூபாய் என்று கூறி இருந்தது. ஆனால் தமிழ்நாட்டுக்கு இது பொருந்தாது என திரையரங்கு உரிமையாளர் சங்க தலைவர் திருப்பூர் சுப்ரமணியன் ஏற்கனவே அறிவித்திருந்தார்.
இந்நிலையில் ரன்பீர் கபூர், ஆலியா பட் , அமிதாபச்சன் நடிப்பில் கடந்த வாரம் வெளியான பிரம்மாஸ்திர படத்திற்கு வட இந்தியாவில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த சமயம் 15 ஆம் தேதி சினிமா தினம் அறிவிக்கப்பட்டதால் வசூல் பாதிக்கும். இதனால் அதிக பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட திரைப்படத்தின் வசூல் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக தேசிய சினிமா தினத்தை வரும் 23ஆம் தேதிக்கு மாற்றி வைத்துள்ளனர் .