Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

கட்டுப்பாட்டை இழந்த ஷேர் ஆட்டோ… “பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து”…. 5 பெண்கள் படுகாயம்….!!!!!

கவரைப்பேட்டை அருகே ஷேர் ஆட்டோ கவிழ்ந்ததில் 5 பெண்கள் படுகாயம் அடைந்தார்கள்.

திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள கும்முடிபூண்டி அடுத்திருக்கும் கவரப்பேட்டை அருகே உள்ள ஏ.என்.குப்பத்திலிருந்து ஷேர் ஆட்டோவில் அந்த கிராமத்தைச் சேர்ந்த பெண்கள் பயணம் மேற்கொண்டார்கள். இந்த ஆட்டோ மேல்முதலம்பேடு சென்ற பொழுது சாலையோர பள்ளத்தில் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது.

இந்த விபத்தில் ஷேர் ஆட்டோவில் பயணம் செய்த ஜெயந்தி, ஜெயா, வைலட், விமலா, ரோஸ் உள்ளிட்ட 5 பெண்கள் படுகாயம் அடைந்தார்கள். இவர்கள் அங்குள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்கள். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள்.

Categories

Tech |