மன்னரின் காரை வழிமறித்து ஒரு நபர் புகைப்படம் எடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரித்தானியா நாட்டின் மகாராணி கடந்த சில நாட்களுக்கு முன்பு உயிரிழந்தார். இதனால் அங்கு அவரது மகனான இளவரசர் சார்லஸ் மன்னராக பொறுப்பேற்றுக் கொண்டார். இந்நிலையில் மன்னர் சார்லஸ் மகாராணியாரின் இறுதி சடங்கு தொடர்பான நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக லண்டனில் இருந்து ஸ்காட்லாந்துக்கு தனது பாதுகாவலர்கள் க காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென சாலையின் குறுக்கே வந்த ஒரு நபர் மன்னரின் காருக்கு முன்னால் சென்று காரை நிறுத்துங்கள் என்பது போல் கைகாட்டியுள்ளார்.
இதனை பார்த்த காருக்குள் இருந்த பாதுகாவலர்கள் பரபரப்பானவர்கள். ஆனால் அந்த நபர் மன்னரின் காரை ஒரு புகைப்படம் எடுத்துவிட்டு அமைதியாக அங்கிருந்து சென்றுள்ளார். இந்நிலையில் அந்த நபர் மன்னரை எப்படியாவது ஒரு புகைப்படம் எடுத்து விட வேண்டும் என்பதற்காக வெகு தூரத்தில் இருந்து ஓடி வருவதை வெளியாகி உள்ள வீடியோவில் காண முடிகிறது. இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.