Categories
சினிமா

“இதனை 4 நாள் பார்த்தால் மகாலட்சுமியை விவாகரத்து செய்திருவேன்….. ரவீந்தர் அதிரடி பேட்டி….!!!!

தயாரிப்பாளர் ரவிந்தர் சந்திரசேகரன் இரண்டு ஆண்டுகளாக காதலித்து டிவி நடிகை மகாலட்சுமி திருமணம் செய்து கொண்டார். ரவீந்தர் தயாரிப்பாளர் என்பதால் பணத்திற்கு ஆசைப்பட்டு மகாலட்சுமி திருமண செய்து கொண்டார் என்று தொடர்ந்து பலர் விமர்சனம் செய்கிறார்கள். இந்நிலையில் ரவிந்தர் ஒரு விஷயம் சொல்லி இருக்கிறார். மகாலட்சுமி தான் நடித்து வரும் அன்பே வா சீரியலை தினமும் பார்க்குமாறு ரவிந்தரிடம் சொல்லுகிறாராம். சொல்வதோடு மட்டுமில்லாமல் இரவு இரவு 10 மணி ஆனால் டிவி முன்பு அமர வைத்து சீரியலை பார்க்க வைக்கிறார்.

அந்த சீரியலை பார்க்க முடியல என்று ரவீந்தர் சந்திரசேகரன் குமுறுகிறார். என்ன அண்ணா மனைவியின் சீரியலை பார்க்க கூடாதா என்று ரசிகர்கள் கூறுகின்றனர். அன்பே வா சீரியலை பார்க்க வைக்கிறாள் 4 நாள் பார்த்தால் அவளை விவாகரத்து செய்திருப்பேன் என்று பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். மேலும் ஒரு சீரியல் பார்க்க இம்புட்டு கஷ்டமா என பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர். இதற்கு முன்பு மகாலட்சுமி நடித்த சீரியல்களை ரவிந்தர் பார்த்ததே இல்லையாம்.

Categories

Tech |