மாட்டுவண்டி பந்தயம் நடத்தக்கோரிய மனு மீது நெல்லை எஸ்.பி பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
பிரதமர் மோடி பிறந்த நாளில் நெல்லை மாவட்டத்தில் மாட்டுவண்டி, குதிரை வண்டி பந்தயம் நடத்த அனுமதி கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் இன்று விசாரணைக்கு வந்தபோது, அரசு தரப்பில் மாட்டு வண்டி, குதிரை வண்டி பந்தயங்கள் நடத்த அனுமதி கிடையாது என பதில் அளிக்கப்பட்டது.
இதையடுத்து கிளை நீதிபதிகள் சட்டம் என்பது அனைவருக்கும் சமமானதுடன் அதில், பாரபட்சம் கூடாது எனவும், பிறந்தநாள் விழா என்றால் நலத்திட்ட உதவி இனிப்பு வழங்கலாம், மாட்டு வண்டி பந்தயம் தான் நடத்த வேண்டும் என்பதில்லை ன்று கருத்து தெரிவித்தது. மேலும் பிரதமர் மோடியின் பிறந்த நாளை ஒட்டி நெல்லையில் மாட்டு வண்டி, குதிரை வண்டி பந்தயம் நடத்த அனுமதி கோரிய மனு மீது நெல்லை எஸ்.பி பதில் தர உத்தரவிட்டுள்ள நீதிபதிகள், வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தனர்..