Categories
உலகசெய்திகள்

நாங்கள் எங்கு செல்வோம்…? வெள்ள பெருக்கால் தவிக்கும் மக்கள்… வீடியோ வெளியிட்ட பத்திரிக்கையாளர் கைது…!!!!!!

பாகிஸ்தானில் வெள்ளப்பெருக்கு பாதிப்பிற்கு 80 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது. 1700 பேர் வரை பலியாகியுள்ளனர். மேலும் வெள்ளத்தின் விளைவாக வீடுகள், உடைமைகள் போன்றவற்றை இழந்த பலர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு இருக்கின்றார்கள். மொத்தம் 3.3 கோடி பேர் வெள்ளத்திற்கு பாதிப்படைந்து இருக்கின்றார்கள். இருந்தபோதிலும் சில பகுதிகளை நிவாரண உதவிகள் கிடைக்காமல் மக்கள் திண்டாடும் நிலை காணப்படுகிறது. சமீபத்தில் ஆறு வயது சிறுமி ரஷ்யா உணவு மருந்து கிடைக்காமல் உயிரிழந்த சோகமும் வெளிவந்துள்ளது. இதனை தொடர்ந்து அவரது தந்தை உட்பட நிவாரண உதவி கேட்டு 200 பேர் போராட்டத்தில் ஈடுபட்டதோடு அந்த விவகாரம் முடிவுக்கு வந்துள்ளது. இதே போல் வெளி உலகத்திற்கு தெரியாமல் பல இன்னல்களை வெள்ளம் பாதித்த மக்கள் அனுபவித்து வருகின்றார்கள். வெள்ள பாதிப்புகளில் சீரழிந்து போயிருக்கின்ற அந்த நாட்டில் சிந்த மாகாணத்தில் உணவில் தேடி சென்ற ஒரு சிறுமியை கும்பல் ஒன்று கடத்தி சென்று அறையில் பல நாட்கள் வரை அடைத்து வைத்து கூட்டு பாலியல் செய்த கொடுமையில் நடைபெற்றுள்ளது.

இதே போல பல பல சம்பவங்கள் சமீப காலங்களாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் இந்து பாக்ரி சமூக மக்களுக்கு நிவாரண பொருட்கள் எதுவும் கிடைக்க விடாமல் உள்ளூர் அதிகாரிகள் தடுத்ததுடன் மட்டுமல்லாமல் அவர்களை துரத்திவிட்ட காட்சிகள் அடங்கிய வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. இந்த வீடியோவை எடுத்த நிருபர் நஸ் எல்லாம் காடானி என்பவரை போலீசார் கைது செய்து இருக்கின்றனர். அவரை ஐந்து நாட்கள் விசாரணைக்கு காவலுக்கு அழைத்து சென்றுள்ளனர். அப்போது அந்த வீடியோவில் சிந் மாகாணத்தில் மேற்போர் மதெல்லா எனும் இடத்தில் வசித்து வரும் பாக்ரி சமூகத்தினர் இந்துக்கள் என்பதற்காக நிவாரண முகாம்களில் இருந்து உள்ளூர் நிர்வாகம் அவர்களை வெளியேற்றி இருக்கிறது என நிருபர்கள் தெரிவித்து இருக்கிறார். மேலும் நாட்டில் சிறுபான்மையினர் பாதுகாப்பு ஊடகம் மகிழ்ச்சியுடனும் வாழ்ந்து வருகின்றார்கள் என அரசு தெரிவித்து வருகின்ற நிலையில் அரசு அதிகாரிகளின் அடாவடித்தனம் அந்த வீடியோவில் வெளிப்படுத்தப்பட்டு இருக்கிறது.

வெள்ளம் பாதித்தோர் அழுது கொண்டு தங்களுடைய நிலைகளை விவரித்து வருகின்றார்கள் அடிப்படை வசதிகளான குடிநீர் உணவு மற்றும் உறைவிடம் போன்றவற்றை கூட இயற்கை பேரிடரால் எல்லாவற்றையும் இழந்த எங்களுக்கு தர மறுக்கின்றார்கள் என அவர்கள் அந்த வீடியோவில் தெரிவிக்கின்றார்கள். மேலும் எங்களை இந்துக்கள் என்பதற்காக நிவாரண முகாம்களில் இருந்து வெளியேற்றி விட்டனர் நாங்கள் வெள்ளம் பாதித்தவர்கள் இல்லை என அவர்கள் தெரிவித்து இருக்கின்றார்கள். நாங்கள் எங்கு செல்ல குழந்தைகளை எப்படி காப்பது ஏழைகளான எங்களது வீடுகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு இருக்கிறது. உணவு நீர் இல்லாமல் எப்படி உயிர் வாழ்வது என அவர்கள் வீடியோவில் கூறும் காட்சிகள் இடம் பெற்றிருக்கிறது. இந்த நிலையில் சமீபத்தில் வெள்ளம் பாதித்த மக்களுக்காக பாலிசிஸ்தானில் இருந்து இந்து சமூகத்தினர் மனித நேய அடிப்படையில் தங்களது கோவில் கதவுகளை நல்லெண்ணத்துடன் திறந்து விட்டனர் என செய்தி விளையான நிலையில் இது போன்ற அவலங்களும் நடைபெற்று வருகிறது.

Categories

Tech |