மத்தியபிரதேசம் மாநிலம் போபால் மாவட்டத்திலுள்ள தனியார் பள்ளியில் 3 வயது சிறுமி நர்சரி வகுப்பு படித்து வருகிறார். அச்சிறுமி கடந்த வியாழக்கிழமை பள்ளிக்கு சென்று விட்டு வீடு திரும்பியுள்ளார். அவ்வாறு பள்ளியிலிருந்து வீடிதிரும்பிய சிறுமியின் உடை மாற்றப்பட்டிருந்தது. மாற்று உடையை யாரோ சிறுமிக்கு அணிந்து அனுப்பியுள்ளனர். இதன் காரணமாக சந்தேசமடைந்த சிறுமியின் தாயார் இது தொடர்பாக பள்ளி நிர்வாகத்திடம் கேட்டுள்ளார்.
அதற்கு பள்ளியில் வைத்து சிறுமியின் உடையை யாரும் மாற்றவில்லை என கூறியுள்ளனர். இந்நிலையில் சிறுமிக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து சிறுமியை மருத்துவமனைக்கு கொண்டு சென்று பரிசோதித்துள்ளனர். அந்த பரிசோதனையில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதற்கான தடயங்கள் இருந்தது. இவ்வாறு தன் மகள் பாலியல் வன் கொடுமை செய்யப்பட்டுள்ளார் என்பதை அறிந்து அதிர்ச்சியடைந்த தாயார் இதுபற்றி சிறுமியிடம் கேட்டுள்ளார். அப்போது அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது நர்சரி வகுப்பு பயின்று வரும் அச்சிறுமியை பள்ளி வேன் டிரைவர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது. சிறுமியை பள்ளி வேனில் வைத்து டிரைவர் பாலியல் வன் கொடுமை செய்துள்ளார். இது தொடர்பாக சிறுமியின் தாயார் காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த பள்ளி வேன் டிரைவரை கைது செய்தனர். அத்துடன் பள்ளி வேனில் பணிபுரிந்த பெண் ஊழியரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.