Categories
தேசிய செய்திகள்

பெரும் சோகம்… அதிகரித்து வரும் விவசாயிகள் தற்கொலை… அறிக்கையில் வெளியான அதிர்ச்சி தகவல்…!!!!!!

மராட்டியத்தில் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா பாதிப்பு பொருளாதார மந்த நிலை போன்றவற்றால் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வது போன்றவை அதிகரித்து காணப்படுகின்றது. இது பற்றி யவத்மால் மாவட்ட கலெக்டர் அமோல் யெட்ஜ் பேசும் போது, விவசாயிகளில் கடந்த வருடம் ஆகஸ்டு மாதத்தில் 48 பேரும், கடந்த செப்டம்பர் மாதத்தில் 12 பேரும் தற்கொலை செய்து இருக்கின்றார்கள். மேலும் நடப்பாண்டில் இதுவரை மொத்தம் 25 விவசாயிகள் தற்கொலை செய்து இருக்கின்றனர். இது பற்றி எங்களுடைய கமிட்டி சாதக பாதக விஷயங்களை ஆய்வு மேற்கொண்டு வருகிறது.

மேலும் நாங்கள் விவசாயிகளுக்கு ஆதரவாக இருப்போம் அரசு திட்டத்தின் படி அரசு அதிகாரிகள் இன்றும் நாளையும் ஒரு நாள் விவசாயிகளுடன் அமர்ந்து குறைகளை கேட்டறிந்து அவர்களிடம் அரசின் திட்டங்கள் மற்றும் பலன்களை எடுத்துக் கூறுகின்றோம் என தெரிவித்துள்ளார். இந்த நிலையில் மராட்டியத்தில் 2020 ஆம் வருடம் கணக்கின்படி கடன் தொல்லையால் 2547 விவசாயிகள் தற்கொலை செய்து இருக்கின்றார்கள். 2021 ஆம் வருடத்தில் ஜனவரி முதலான 11 மாத காலத்தில் 2,498 விவசாயிகள் தற்கொலை செய்து இருக்கின்றார்கள். மேலும் அரசின் கடன் தள்ளுபடிகள் இருந்த போதிலும் கடனை திருப்பி செலுத்த முடியாததற்காக விவசாயிகளின் தற்கொலை தொடர்கிறது என மாநில வருவாய் துறை அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கிறது. இந்த நிலையில் மராட்டியத்தில் 2001 முதல் 2019 வருட வரையிலான 20 வருடங்களில் 32,605 விவசாயிகள் என்னும் அளவில் விவசாயிகள் தற்கொலை செய்து இருக்கின்றார்கள் இது வருடத்திற்கு சராசரியாக 1716 என்ற அளவில் இருக்கிறது.

Categories

Tech |