Categories
தேசிய செய்திகள்

சூப்பரோ சூப்பர்….. ரிட்டயர்மெண்டுக்கு பின் ரூ.50,000 பென்ஷன்….. உடனே முதலீடு செய்யுங்கள்….!!!!!

பணி ஓய்வு பெற்ற பின் நிலையான வருமானம் பெற வேண்டியது மிக அவசியம். இதனால் பண தேவைகளுக்கு மற்றவர்களை சார்ந்து இருக்க வேண்டிய தேவை இல்லாமல் போகிறது. ஆனால் ஓய்வு கால வருமானத்துக்கு பணி ஓய்வு பெற்ற பிறகு திட்டமிடுதல் கூடாது. இளம் பருவத்தில் இருந்தே ஓய்வு கால வருமானத்திற்கு முதலீடு செய்து வர வேண்டும். ஒரு எறும்பு மழைக்காலத்துக்கு தேவையான தானியங்களை எப்படி செய்கிறதோ அப்படி இளம் வயதில் இருந்தே சேமிப்பு, முதலீட்டை தொடங்க வேண்டும் அரசு ஊழியர்களாக இருப்பவர்களுக்கு ஓய்வூதிய திட்டங்கள் தானாகவே வந்து விடுகின்றன. ஆனால் தனியார் ஊழியர்கள் சுய விருப்பத்தின் பேரில் பென்ஷன் திட்டங்களில் முதலீடு செய்ய வேண்டும். எவ்வளவு விரைவில் முதலீட்டை தொடங்குகிறோமோ அவ்வளவு வருமானம் அதிகரிக்கும். தேசிய பென்சன் திட்டத்தில் முதலீடு செய்ய விரும்பும் தனியார் ஊழியர்களுக்கு தேசிய பென்ஷன் திட்டம் ஒரு நல்ல வாய்ப்பு அளிக்கிறது.

இந்த திட்டம் முதலில் அரசு ஊழியர்களுக்காக அறிமுகப்படுத்தப்பட்டது. அதன் பிறகு தனியார் ஊழியர்களுக்கும் கணக்கு தொடங்க அனுமதிக்கப்பட்டுள்ளது. பென்ஷன் திட்டத்தில் முதலீடு செய்வதால் ரிட்டயர்மென்டுக்கு பின் பென்ஷன் வருமானம், வருமானவரி சலுகைகள் என பல்வேறு பலன்கள் கிடைக்கின்றன. தேசிய பென்ஷன் திட்டத்தில் உரிய திட்டம் முதலீடு செய்தால் பணி ஓய்வு பிறகு மாதம் ரூ.50 ஆயிரம் கூட பென்ஷன் பெற முடியும். தேசிய பென்ஷன் திட்டத்தில் இளம் பருவத்திலிருந்தே நீங்கள் முதலீடு செய்யும் தொகை பங்குகள், பத்திரங்கள் போன்றவற்றில் முதலீடு செய்யப்படும். முதலீடு மெல்ல மெல்ல உயர்ந்து நீங்கள் பணி ஓய்வு பெறும்போது பெரும் தொகையாக மாறி இருக்கும். அதில் அதிகபட்சம் 60% வரை நீங்கள் எடுத்துக்கொண்டு மீதம் தொகை வைத்து ஆண்டு தொகை வாங்க வேண்டும். அதன்படி மீதம் தொகை மூலம் உங்களுக்கு ஒவ்வொரு மாதமும் பென்ஷன் கிடைக்கும். மேலும் தேசிய பென்ஷன் திட்டத்தில் நீங்கள் முதலீடு செய்யும் தொகைக்கும் பணி ஓய்வு பெறுவது எடுத்துக் கொள்ளும் தொகைக்கும் வருமான வரி விலக்கு உண்டு.

Categories

Tech |