Categories
மாநில செய்திகள்

“அவரால் சொந்த தொகுதியில் கூட வெற்றி பெற முடியவில்லை”….. அண்ணாமலையை கலாய்த்து தள்ளிய கே.சி.ஆர்……!!!

கடந்த சில தினங்களுக்கு முன்பு பேசி அண்ணாமலை, மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரே ஆட்சியை கலைத்ததே போல தமிழகத்திலும் திமுக ஆட்சியை ஒரு ஏகநாத் ஷிண்டே புறப்பட்டு வந்து கலைப்பார் என்று கூறியது சர்ச்சையானது. இதற்கிடையில் தெலுங்கானா முதல்வரும் தெலுங்கானா ராஷ்ட்ரிய சாமிதி கட்சி தலைவருமான சந்திரசேகர ராவ் பாஜகவை தேசிய அளவில் கடுமையாக எதிர்த்து வருகிறார். பாஜகவிற்கு எதிராக மாநில கட்சிகளை ஒன்று திரட்டும் பணியிலும் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். தேசிய கட்சியை விரைவில் தொடங்கப் போவதாகவும் சந்திரசேகர் ராவ் குறிப்பிட்டு இருந்தார். 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் எதிர்க்கட்சிகளின் கூட்டணி உருவாக்க சந்திரசேகர் ராவ் முயற்சி செய்து வருகிறார்.

இந்நிலையில் அண்ணாமலையை குறிப்பிட்டு சந்திரசேகர் கூறியது, தமிழ்நாட்டில் திமுக ஆட்சியை கவிழ்விக்க போவதாக அண்ணாமலை கூறியுள்ளார். தமிழ்நாட்டில் இருந்தும் ஏக்நாத் ஷிண்டே வரப்போவதாக அண்ணாமலை சொல்லி வருகிறார். அண்ணாமலையால் அவர் சொந்த தொகுதியில் கூட வெற்றி பெற முடியவில்லை. சொந்த தொகுதியில் வெற்றி பெற முடியாது அண்ணாமலை தான் தமிழ்நாட்டில் ஆட்சியை கவிழ்க்க போவதாக கூறுகிறார் என்று சந்திரசேகர ராவ் அண்ணாமலையை கலாய்த்துள்ளார். தொடர்ந்து பேசியவர் பாஜகவிற்கு தெரிந்தது எல்லாம் ஏக நாத் ஷிண்டே வகை தந்திரம் தான். அவர்களால் ஒருபோதும் நேர்மையாக வெற்றி பெற முடியாது என்று கூறினார். இது அரசியல் வட்டத்தில் பெரும் பேசுபொருளாகி வருகிறது.

Categories

Tech |