Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

உறவினர்களை பார்க்க சென்ற குடும்பத்தினர்…. தந்தை-மகள் பலியான சோகம்…. நெல்லையில் பரபரப்பு….!!

தண்ணீரில் மூழ்கி தந்தை-மகள் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஆலடியூரில் இலங்கை தமிழர் அகதிகள் முகாம் அமைந்துள்ளது. இங்குள்ள உறவினர்களை பார்ப்பதற்காக இலங்கை கொழும்பு பகுதியை சேர்ந்த இர்பான் முகம்மது (34) என்பவர் தனது மனைவி ஜூட்மேரிசுசி, மகள்கள் இஷானா (8), இஷ்ரா (5) ஆகியோருடன் கடந்த மாதம் ஆலடியூருக்கு சென்றுள்ளார். கடந்த 1 மாதமாக தங்கியிருந்த இர்பான் முகம்மது பெயிண்டிங் வேலைக்கு சென்று வந்ததாக கூறப்படுகிறது.  நேற்று முன்தினம் விக்கிரமசிங்கபுரம் அருகே உள்ள தாமிரபரணி ஆற்றில் குளிப்பதற்காக இர்பான் முகம்மது தனது குடும்பத்துடன் சென்றுள்ளார்.

இந்நிலையில் குளித்து கொண்டிருந்த போது இஷானாவை தண்ணீர் இழுத்து சென்றதை பார்த்த இர்பான் முகம்மது தனது மகளை காப்பாற்ற முயற்சி செய்துள்ளார். ஆனால் தண்ணீரின் வேகத்தை எதிர்கொள்ள முடியாததால் இர்பான் முகம்மதும், இஷானாவும் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தனர். இதுகுறித்து தகவலறிந்த தீயணைப்பு வீரர்கள் இர்பான் முகம்மதுவின் உடலை மீட்டனர். தொடர்ந்து சுமார் 3 மணி நேரம் தேடுதலுக்கு பின்னர் சிறுமியின் உடலையும் மீட்டனர்.

பின்னர் 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து விக்கிரமசிங்கபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இலங்கையில் நடைபெற்று வரும் உள்நாட்டு பிரச்சினைகளுக்கு இடையே இவர்கள் எப்படி தமிழகத்திற்கு வந்தனர்? அப்படி உறவினர்களை பார்க்க வந்தால், இர்பான் முகம்மது எதற்காக வேலைக்கு செல்ல வேண்டும்? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |