Categories
தேசிய செய்திகள்

இந்த வங்கி வாடிக்கையாளர்கள்…. இனி அதிக EMI கட்டணும்…. வெளியான ஷாக் நியூஸ்….!!!!

யூனியன் பாங்க் ஆப் இந்தியா கடன்களுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளதாக அறிவித்துள்ளது. இந்த புதிய வட்டி உயர்வு செப்டம்பர் 12 அதாவது இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. யூனியன் வங்கி கடன்களுக்கான MCLR வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது. இந்த வட்டி விகிதம் 0.05% முதல் 0.35 சதவீதம் வரை உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் வீட்டுக் கடன், வாகன கடன் மற்றும் தனி நபர் கடன் போன்ற கடன்கள் வாங்கியவர்கள் இனி மாதம்தோறும் செலுத்தும் இஎம்ஐ தொகை உயரக்கூடும்.

அதுமட்டுமல்லாமல் ஏற்கனவே கடன் வாங்கியவர்கள் மற்றும் இனி புதிதாக கடன் வாங்குவோர் என இரு தரப்பினரும் பாதிக்கப்படுவர். MCLR வட்டியை 8 புள்ளி 10 சதவீதமாக உயர்த்தியுள்ளதாக யூனியன் பாங்க் ஆப் இந்தியா தெரிவித்துள்ளது .ரிசர்வ் வங்கி அண்மையில் ரெப்போ வட்டி விகிதத்தை ஐந்து புள்ளி 40 சதவீதமாக உயர்த்திய நிலையில் பல்வேறு வங்கிகளும் கடன்களுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தி வருகின்றன. அந்த வரிசையில் யூனியன் பாங்க் ஆப் இந்தியா வங்கியும் தனது கடன் வட்டியை உயர்த்தியுள்ளதாக அறிவித்துள்ளது

Categories

Tech |