Categories
தேசிய செய்திகள்

வட்டியை உயர்த்திய பேங்க் ஆஃப் பரோடா வங்கி…. புது ரேட் இதுதான்….. வாடிக்கையாளர்களுக்கு அலர்ட்….!!!!

பேங்க் ஆஃப் பரோடா கடன்களுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தி அறிவித்துள்ளது.

ரிசர்வ் வங்கி தொடர்ந்து ரெப்போ வட்டியை உயர்த்தி வருகிறது. ரெப்போ வட்டி மே மாதம் 4.40% ஆகவும், ஜூன் மாதம் 4.90% ஆகவும், இந்த ஆகஸ்ட் மாதம் 5.40% ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் பல்வேறு வங்கிகள் வட்டி விகிதத்தை தொடர்ந்து உயர்த்தி வருகின்றன. அந்தவகையில் பொதுத்துறை வங்கியானபேங்க் ஆஃப் பரோடா (Bank of Baroda) கடன்களுக்கான வட்டி விகிதத்தை 0.05% முதல் 0.20% வரை உயர்த்தியுளதாக பங்குச் சந்தையில் தாக்கல் செய்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

அதன்படி, அனைத்து தவணைக்கால கடன்களுக்கான வட்டி விகிதம் 0.10% உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் ஓராண்டுக்கான கடன் வட்டி விகிதம் 7.70%-ல் இருந்து 7.80% ஆகவும், 6 மாத கடன்களுக்கு 7.55%-ல் இருந்து 7.65% ஆகவும் உயர்ந்துள்ளது. வட்டி விகிதம் உயர்வால் தனிநபர், கார், வீட்டுக்கடன்களுக்கான இஎம்ஐ உயரும். இந்த புதிய வட்டி விகிதம் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.

Categories

Tech |