Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

மரத்தின் மீது மோதிய கார்…. வாலிபர் பலி; 2 பேர் படுகாயம்…. கோர விபத்து…!!

மரத்தின் மீது கார் மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டத்தில் உள்ள கீழக்கொல்லை பகுதியில் ஜெயராமன் என்பவர்களுக்கு வருகிறார். இவருக்கு ஜெய்சங்கர்(34) என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் ஜெய்சங்கர் தனது நண்பரான ஞானபிரகாஷ்(30), சிவஞானம்(25) ஆகியோருடன் காரில் மின் மோட்டார் வாங்குவதற்காக கோவை நோக்கி சென்று கொண்டிருந்தார். அவர்கள் மின் மோட்டாரை வாங்கி கொண்டு அதே காரில் பண்ருட்டி நோக்கி வந்து கொண்டிருந்தனர். இந்நிலையில் அதிகாலை 5 மணி அளவில் விருதாச்சலம்- சேலம் சாலையில் பெரியநெசலூர் பேருந்து நிறுத்தம் அருகே சென்றபோது கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரம் இருந்த மரத்தின் மீது பயங்கரமாக மோதியது.

இந்த விபத்தில் படுகாயமடைந்த ஜெய்சங்கர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துவிட்டார். இதனை அடுத்து படுகாயமடைந்த சிவஞானம், ஞானபிரகாஷ் ஆகிய இருவரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையில் போலீசார் ஜெய்சங்கரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |