கார்கிவ் நகரத்தில் 2 இடங்களில் உள்ள தங்கள் படைகளை திரும்பப் பெறுவதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது.
உக்ரைனில் ரஷ்யா கைப்பற்றியுள்ள பகுதிகளை மீட்க, கடந்த வாரம் உக்ரைனின் எதிர்த்தாக்குதல் தொடங்கியது. உக்ரைன் நாட்டின் தெற்கில் இரண்டு குடியேற்றங்களையும், கிழக்கு உக்ரைனில் மூன்றில் ஒரு பகுதியையும் கைப்பற்றியுள்ளது. இந்நிலையில் கார்கிவ் நகரத்தில் 2 இடங்களில் உள்ள தங்கள் இராணுவ படைகளை திரும்பப் பெறுவதாக ரஷ்யா பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது.
இது குறித்து ரஷ்ய செய்திதொடர்பாளர் இகோர் கொனாஷென்கோவ் கூறியதாவது, “ரஷ்ய துருப்புக்கள் பலாக்லியா மற்றும் இஸியம் பகுதிகளிலிருந்து டொனெட்ஸ்க் பகுதிக்கு மீண்டும் ஒருங்கிணைக்கப்படும். கார்கிவ் பகுதியில் ரஷ்ய படைகளுக்கு இஸியம் ஒரு முக்கிய தளமாக இருந்தது. டான்பாஸை விடுவிப்பதற்கான சிறப்பு இராணுவ நடவடிக்கையின் இலக்குகளை அடைவதற்காக இது மேற்கொள்ளப்படுகின்றது” என்று அவர் தெரிவித்துள்ளார். உக்ரைனின் கிழக்கு பகுதிகளில் ஒன்றான டான்பாஸை இறையாண்மை மிக்க பகுதியாக ரஷ்யா அறிவித்துள்ளது.