Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

“மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த அரசு பள்ளி தலைமை ஆசிரியர்”…. 5 வருடம் சிறை தண்டனை….!!!!!

பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் பள்ளி தலைமை ஆசிரியருக்கு 5 வருட சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

மாவட்டத்திலுள்ள அரசு தொடக்கப்பள்ளியில் சென்ற 2016ஆம் வருடம் தலைமை ஆசிரியராக பணிபுரிந்த சந்திர சேகரன் என்பவர் அந்த வருடம் மார்ச் மாதம் பள்ளியில் பயின்ற சில மாணவிகளுக்கு பாலியல் ரீதியாக தொல்லை தந்ததாக புகார் எழுந்ததை தொடர்ந்து கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டார்கள்.

அதன் பேரில் காவல் நிலையத்திலும் புகார் அளிக்கப்பட்டது. பின் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து சந்திரசேகரனை கைது செய்து விசாரணை மேற்கொண்டார்கள். இந்த வழக்கானது தர்மபுரி மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையில் அவரின் மீதான குற்றச்சாட்டு உறுதியானது. இதை தொடர்ந்து ஐந்து வருட சிறை தண்டனையும் பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

Categories

Tech |