அமைச்சர் கே.என் நேரு மீது அதிமுக ஆட்சியில் தொடரப்பட்ட அவதூறு வழக்கை ரத்து செய்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2020 ஆம் ஆண்டு எஸ்.பி வேலுமணி குறித்து அவதூராக பேசியதாக கோவை நீதிமன்றத்தில் நேருவுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டிருந்தது. எஸ் பி வேலுமணியின் புகழுக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் நேரு எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை எனக்கூறி வழக்கை ரத்து செய்தது உயர்நீதிமன்றம்.
Categories
அமைச்சர் கே.என் நேரு மீதான அவதூறு வழக்கை ரத்து செய்தது உயர்நீதிமன்றம்..!!
