Categories
மாநில செய்திகள்

“தமிழகமும் புதுவையும் வேறல்ல ஒன்றுதான்”….. முதல்வர் ரங்கசாமி பெருமிதம்….!!!!

புதுச்சேரி அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை குறித்த கலந்தாய்வு கூட்டம் முதல்வர் ரங்கசாமி தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். மேலும் சட்டமன்ற உறுப்பினர்கள் சம்பத், செந்தில் குமார், ரமேஷ், புதுச்சேரி மற்றும் தமிழக மருத்துவர்கள், மாணவர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் பேசிய முதல்வர் ரங்கசாமி, உயிரே காக்கும் பணியில் அலட்சியம் காட்டாமல் மருத்துவர்கள் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க வேண்டும். தமிழகத்தில் விரிவான நிலையில் மருத்துவ பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. தமிழகத்தில் ஏராளமான மருத்துவ வசதிகள் செயல்பட்டு உள்ளன. இது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.

அதனை தொடர்ந்து புதுச்சேரியில் மிகவும் சிரமப்பட்டு தான் அரசு மருத்துவக் கல்லூரியை துவக்கினேன். ஜிம்பரை விட சிறந்த மருத்துவக் கல்லூரியாகவும், உலகத்தரம் வாய்ந்த மருத்துவ கல்லூரியும் கொண்டுவர வேண்டும். இடையில் தொய்வு இருந்தாலும் தற்போது சிறந்த மருத்துவ கல்லூரியாக இது வந்து கொண்டிருக்கிறது. மேலும் புதுச்சேரி மாநிலத்தில் சுகாதாரத்துறைக்கு 9.5% நீதியே பட்ஜெட்டில் ஒதுக்கி உள்ளோம். அதனை போல தமிழகத்திலும் அதிக நிதியை ஒதுக்கி நோயை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். தமிழகமும் புதுவையும் வேறல்ல இரண்டு மாநிலங்களும் இணைந்த ஒன்று தான்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |