முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தை செயல்படுத்துவது குறித்து ஆட்சியர் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
தமிழகத்தில் முதலமைச்சர் காலை உணவு திட்டத்தினை முதல் முதலாக ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிகள் செயல்படுத்துவது பற்றி ஆட்சியர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்பொழுது ஜமுனா மரத்தூரில் இருக்கும் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள வதியன்கொட்டாய் கிராமத்தில் இருக்கும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியிலும் கோவிலூர் ஊராட்சி பெருங்காட்டூர் மற்றும் குண்டாளத்தூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியிலும் பாக்குமுடையனுர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியிலும் கோவிலானுர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியிலும் மாணவர்களுக்கு அளிக்கப்படும் உணவின் தரம் மற்றும் அடிப்படை வசதிகள் பற்றி ஆய்வு மேற்கொண்டார்.