நவீனக் காலத்தில் அனைவரும் செல்போன் பயன்படுத்தக்கூடிய ஒன்றாக இருந்துவருகிறது. செல்போன் வாயிலாக கடன் பெறுவதற்காக பல்வேறு புது செயலிகள் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்த செயலிகள் ரிசர்வ்வங்கி அனுமதி இன்றி, புதிது புதிதாக இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது. இது தொடர்பான விளம்பரங்கள் சமூகவலைதளங்களில் பரப்பப்படுகிறது. கடனை திருப்பி செலுத்த தாமதப்படுத்துபவர்கள் குறித்த விபரங்களையும், புகைப்படங்களையும் வாட்ஸ்அப் குழுக்களில் பகிர்வது, கடன் பெற்றவர்களை செல்போன் வாயிலாக தொடர்புகொண்டு தவறாக பேசுவது, மிரட்டுவது ஆகிய செயல்களில் ஈடுபடுகின்றனர்.
இதன் காரணமாக மனஉளைச்சலுக்கு ஆளாகி, சம்பந்தப்பட்டவர்கள் தற்கொலை செய்துகொள்ளும் மனநிலைக்கு செல்கின்றனர். இவர்கள் மீது பல புகார்கள் எழுந்துள்ளது. தமிழகம், ஆந்திரா உள்ளிட்ட பல மாநிலங்களில் செயலி வயிலாக கடன் பெற்றவர்கள் தற்கொலை செய்வது அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் சட்டவிரோத கடன் செயலிகளை தடைசெய்ய வேண்டும் என்ற புகார் தொடர்ந்து வருகிறது.
அதனடிப்படையிலே இன்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் உயர்மட்ட கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில் ரிசர்வ் வங்கியை சேர்ந்த மூத்த அதிகாரிகள் மற்றும் பல மத்திய அரசு துறையைச் சேர்ந்த அதிகாரிகள் பங்குபெற்றார்கள் . அந்த கூட்டத்தின் இறுதியில் சட்டவிரோதகடன் செயலிகளை தடைசெய்ய பல நடவடிக்கைகள் மேற்கொள்ள முடிவுசெய்யப்பட்டுள்ளது. ரிசர்வ் வங்கியால் அனுமதிக்கப்படும் கடன் செயலிகள் மட்டுமே இனிமேல் ஆப் ஸ்டோரில் இருக்க அனுமதிக்கப்படும்.என தகவல் வெளியாகியுள்ளது.