முதன்முதலாக தேசிய சுற்றுலாக் காலண்டரில் திருப்பதியில் ஒன்பது நாட்கள் நடைபெறும் பிரமோற்சவ விழா சேர்க்கப்பட்டுள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவ விழாவிற்கு ஆண்டு தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். ஒன்பது நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் ஒவ்வொரு நாளும் பல வாகனங்களில் ஏழுமலையான் எழுந்தருளி வலம் வருவார். இந்த விழா தேசிய சுற்றுலா காலண்டரில் முதன்முதலாக சேர்க்கப்பட்டுள்ளது. சுற்றுலா அமைச்சகத்தின் இணையதளத்தில் நிகழ்வுகள் மற்றும் திருவிழா பிரிவின்கீழ் திருமலை பிரம்மோற்சவலு என பட்டியலிடப்பட்டுள்ளது.
இதன் மூலம் இந்தியாவில் உள்ள புகழ்பெற்ற ஆன்மீக தலங்களுக்குச் செல்ல திட்டமிட்டுள்ள வெளிநாட்டினர் இடையே ஆன்மிக சுற்றுலாவை ஊக்குவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் பிரம்மோற்சவம் கோலாகலமாக கொண்டாடப்படும். மத்திய சுற்றுலா அமைச்சகம் தற்போது இந்த நிகழ்வை அங்கீகரித்திருப்பதால் விழா பற்றிய விரிவான விளக்கம் இணையதளத்தில் குறிப்பிடப்படும் என்று தெரிவித்துள்ளார்.