Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

கோழியை துரத்தி கடித்த நாய்…. வாலிபருக்கு நடந்த கொடூரம்…. பரபரப்பு சம்பவம்…!!

வாலிபர் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நத்தம் காமராஜர் நகரில் விஜயன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு டிப்ளமோ என்ஜினீயரான விஷ்ணு(26) என்ற மகன் இருந்துள்ளார். இவர் தனது வீட்டில் ஒரு நாயை வளர்த்து வந்தார். அதே பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளியான முத்து(38) என்பவர் தனது வீட்டில் ஒரு கோழி வளர்த்து வருகிறார். இந்நிலையில் முத்துவின் வீட்டருகே இரை தேடி கொண்டிருந்த கோழியை அங்கு வந்த விஷ்ணுவின் நாய் கடித்ததாக கூறப்படுகிறது. இதனால் நேற்று காலை முத்து விஷ்ணுவிடம் கோழியை நாய் கடித்தது குறித்து கேட்டு தகராறு செய்துள்ளார்.

இதில் கோபமடைந்த முத்து தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் விஷ்ணுவை சரமாரியாக குத்திவிட்டு தப்பி ஓடினார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம்பத்தினர் படுகாயமடைந்த விஷ்ணுவை மீட்டு சிகிச்சைக்காக நத்தம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி விஷ்ணு பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் முத்துவை கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |