மாணவர்களுக்கு கல்வி இலவசமாக வழங்கப்பட வேண்டும் என்று உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் கருத்து கூறியுள்ளனர்.
மாணவர்களுக்கு கல்வி அரசால் இலவசமாக வழங்கப்பட வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். மேலும் கல்லூரிகளில் மாணவர்களின் கல்வி கட்டணத்தை முறைப்படுத்துவது குறித்து, அதனை மீறுவோர் மீதான நடவடிக்கை பற்றியும் தமிழக உயர்கல்வித்துறை செயலாளர் பதிலளிக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளில் பின்புலத்தை பார்க்காமல் திறமையின் அடிப்படையில் முழுமையான கல்விச் செலவையும் அரசே ஏற்கிறது என்பதையும் நீதிபதிகள் மகாதேவன், சத்ய நாராயண பிரசாத் அமர்வு குறிப்பிட்டு பேசியிருக்கிறார்கள். தமிழக உயர்கல்வித்துறை செயலாளர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்தது உயர் நீதிமன்ற மதுரை கிளை..