Categories
உலக செய்திகள்

“நீண்ட காலம் ஆட்சி செய்த ராணி எலிசபெத்”…. இவருக்கே 2-வது இடம்னா….! அப்போ முதல் இடத்தில் யார்?….!!!

உலகின் நீண்ட காலம் ஆட்சி செய்த இரண்டாவது நபர் என்ற பெருமைக்கு உரியவர் இரண்டாம் எலிசபெத். இதில் முதலிடத்தில் யார் உள்ளார் என்பது பற்றி தெரிந்து கொள்வோம்.

இங்கிலாந்து ராணி இரண்டாவது எலிசபெத் நேற்று உடல் நலக்குறைவு காரணமாக மரணமடைந்தார். இவருக்கு 96 வயது, ராணி இரண்டாம் எலிசபெத்தின் இயற்பெயர் எலிசபெத் அலெக்சாண்ட்ரியா மேரி. 1926 ஆம் ஆண்டு ஏப்ரல் 21ஆம் தேதி பிறந்த எலிசபெத் பிப்ரவரி 1952 ஆம் ஆண்டு இங்கிலாந்து ராணியாக பொறுப்பேற்றார். கடந்த 70 ஆண்டுகளாக இங்கிலாந்து ராணியாக செயல்பட்டு வந்தார். இங்கிலாந்துக்கு மட்டுமின்றி 14 நாடுகளின் அரசியல் சாசன சட்டப்படி அரிசியாக உள்ளார். இங்கிலாந்து பிரதமர் தேர்வுக்கு இராணி இரண்டாம் எலிசபெத் முக்கிய பங்கு வகிக்கிறார்.

ஒவ்வொரு முறை இங்கிலாந்துக்கு புதிய பிரதமர் தேர்ந்தெடுக்கும் போது அதில் ராணி இரண்டாம் எலிசபெத்தின் பங்கு மிக முக்கியம். ராணி இரண்டாம் எலிசபெத்தின் கணவரான இளவரசர் பிலிப் கடந்த ஆண்டு உயிரிழந்தார். இந்த தம்பதிக்கு மூன்று மகன்கள் ஒரு மகள் என நான்கு பேர் உள்ளன. இவர் உயிரிழந்ததை தொடர்ந்து மூத்த மகன் சார்லஸ் இங்கிலாந்தின் புதிய அரசராக பொறுப்பேற்றுக் கொண்டார். ராணி எலிசபெத் மரணம் அடைந்த நிலையில் இவர் நீண்ட காலம் ஆட்சி செய்த நபர் என்ற பெருமையை பெறுகிறார். 1952 ஆம் ஆண்டு அரியனை ஏறிய எலிசபெத் 70 ஆண்டுகள் 214 நாட்கள் ராணியாக செயல்பட்டுள்ளார்.

63 ஆண்டுகள் இங்கிலாந்து ராணியாக இருந்த விக்டோரியாவின் சாதனையை முறியடித்து இங்கிலாந்தை நீண்ட காலமாக ஆட்சி செய்த நபர் என்ற பெருமையை பிடித்துள்ளார். அதேபோல் இவர் உலகின் நீண்ட காலம் ஆட்சி செய்த இரண்டாவது நபர் என்ற பெருமையை பெற்றுள்ளார். ஆனால் உலகில் நீண்ட காலம் ஆட்சி செய்த முதல் நபர் என்ற பெருமையை லூயிஸ் மன்னர் தட்டிச் சென்றுள்ளார். இவர் 72 ஆண்டுகள் 110 நாட்கள் ஆட்சி செய்து 14 ஆம் லூயிஸ் உலகின் நீண்ட நாள் ஆட்சி செய்த நபர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

Categories

Tech |