இங்கிலாந்து மகாராணி இரண்டாம் எலிசபெத் உடல்நல குறைவு காரணமாக காலமானார்.
இங்கிலாந்து மகாராணி இரண்டாம் எலிசபெத் பக்கிங்காம் அரண்மனையில் வசித்து வருகிறார். இவருக்கு தற்போது 96 வயதாகிறது. இந்நிலையில் மகாராணி இரண்டாம் எலிசபெத்திற்கு இன்று திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது.
இதனை அடுத்து அரண்மனையில் உள்ள அதிகாரப்பூர்வ மருத்துவ குழுவினர் ராணிக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால் மருத்துவ குழுவினர் அளித்த சிகிச்சை பலனளிக்காமல் இன்று அவர் திடீரென காலமானார் என அதிகாரபூர்வமாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனால் இளவரசர்களும் குடும்ப உறுப்பினர்களும் அரண்மனைக்கு விரைந்த வண்ணம் உள்ளனர். மேலும் இங்கிலாந்து மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் மறைவிற்கு உலக நாடுகளில் உள்ள தலைவர்கள் தொடர்ந்து இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்த சம்பவம் பிரிட்டன் மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
இந்நிலையில் இங்கிலாந்து மகாராணி இரண்டாம் எலிசபெத் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள குறிப்பில் கூறியதாவது “நமது காலத்தின் மிக உறுதியானவராக இங்கிலாந்து மகராணியார் இரண்டாம் எலிசபெத் நினைவு கூறப்படுகிறார். இவர் பிரிட்டன் தேசத்திற்கும் அங்குள்ள மக்களுக்கும் ஊக்கமளிக்கும் தலைமையை வழங்கியுள்ளார். அதோடு மட்டுமல்லாமல் பொது வாழ்வில் கண்ணியத்தையும் நேர்மையையும் வெளிக்காட்டியுள்ளார். அவருடைய மறைவால் நான் மிகவும் வேதனை அடைந்துள்ளேன்.
இந்த சோகமான நேரத்தில் எனது நினைவுகளும் எண்ணங்களும் அவருடைய குடும்பம் மற்றும் இங்கிலாந்து மக்கள் மீதும் இருக்கும். மேலும் 2015 முதல் 2018 ஆம் ஆண்டு வரையிலான என்னுடைய இங்கிலாந்து பயணத்தின் போது மகாராணியார் எலிசபெத் உடன் நான் மறக்க முடியாத சந்திப்புகளை மேற்கொண்டு உள்ளேன். அவருடைய கருணையையும் அரவனைப்பையும் என்னால் எப்போதும் மறக்க முடியாது. மேலும் ஒரு சந்திப்பின்போது மகாராணியாரின் திருமணத்தில் மகாத்மா காந்தி பரிசாக கொடுத்த கை குட்டையை என்னிடம் காட்டியுள்ளார். அந்த சைகையை நான் எப்போதுமே போற்றுவேன்” என குறிப்பிட்டுள்ளார்.