பயன்படுத்த முடியாத நிலையில் இருக்கும் பொது கழிவறையை கண்டு மக்கள் புலம்பி வருகின்றனர்.
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள அம்மன் குளம் பகுதியில் பொது கழிவறை ஒன்று உள்ளது. இந்த கழிவறையானது மிக மோசமான நிலைமையில் இருக்கிறது. அதோடு மட்டுமல்லாமல் இரு பேஷன்களும் அருகருகேவும் கதவுகள் இல்லாத நிலையிலும் இருக்கிறது. இந்த கழிப்பிடம் பயன்பாட்டுக்கு வந்தாலும் பயன்படுத்த முடியாத நிலையில் இருக்கின்றது என அப்பகுதி மக்கள் புலம்பித் தவிக்கின்றனர்.
இது குறித்து சமூக ஆர்வலரான ஒருவர் கூறியதாவது “பொதுக்கழிப்பிடம் என்பதால் எல்லாமே பொதுவாக வைத்து விட்டனர். என்னதான் தாயும் பிள்ளையுமாய் இருந்தாலும் காலை கடனை முடிக்க சென்றால் ஒரே இடத்தில் ஒட்டி இருக்க முடியுமா? இந்த அவல நிலைகளுடன் இனியாவது யாரும் இப்படி கழிப்பிடம் கட்டாமல் இருக்க வேண்டும். மேலும் இதனை கண்காணிக்க அதிகாரிகள் யாரேனும் முன் வர வேண்டும்” என்று அவர் கூறியுள்ளார்.