கோயில் விழாக்களில் ஆடல், பாடல் நிகழ்ச்சிகளுக்கு கடும் கட்டுப்பாடுகளை விதித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி சக்தி குமார் சுகுமார் குரூப் உத்தரவில், தமிழகத்தில் கோயில் திருவிழாவில் ஆடல், பாடல் நிகழ்ச்சிகளை இரவு 7 மணி முதல் இரவு 10 மணி வரை மட்டுமே நடத்த வேண்டும். பொதுமக்களுக்கும் போக்குவரத்துக்கும் எந்த இடையூறும் ஏற்படுத்தக் கூடாது. ஆடல், பாடல் நிகழ்ச்சியில் அரசியல் கட்சி அல்லது மதத்துக்கு ஆதரவாகவோ, எதிராகவோ பிளக்ஸ் போர்டுகள் வைக்க கூடாது. ஆடல் பாடல் நிகழ்ச்சியில் பங்கேற்போர் குட்கா மதுபானங்களை உட்கொள்ளக் கூடாது. மேலும் அரசியல் கட்சி, மதம், சமூகம், ஜாதி குறிப்பிடும் பாடல்கள் இடம் பெறக் கூடாது. இரட்டை அர்த்த பாடல்கள் ஆபாசம் இடம்பெறக்கூடாது எனவும் உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.