Categories
தேசிய செய்திகள்

அதிர்ச்சி…! அங்கீகரிக்கப்படாத ஆன்டிபயாட்டிக் மாத்திரைகள்….. ஆய்வில் தகவல்….!!!!

ஆன்டிபயாடிக் மருந்துகளை மருத்துவர் ஆலோசனையின் படி மட்டுமே உட்கொள்ள அளவில், சரியான காலத்துக்கு, சரியான காரணத்துக்கு மட்டுமே உட்கொண்டால்  இருக்காது. .ஆனால், மருந்து உட்கொள்ள தொடங்கி, உடல்நலம் கொஞ்சம் தேற தொடங்கியதும் மருந்துகள் உட்கொள்வதை நிறுத்துவது உடல்நலனுக்கு கேடாகும். அரைகுறையாக மருந்து சாப்பிடும் போது, கிருமிகள் தங்கள் எதிர்ப்பு திறனை வளர்த்துக்கொள்கின்றன. அமெரிக்காவின் பாஸ்டன் பல்கலைக்கழகம் மற்றும் பப்ளிக் ஹெல்த் ஃபவுண்டேஷன் ஆஃப் இந்தியா (PHFI) இணைந்து, கடந்த 2019ஆம் ஆண்டு தனியார் மருத்துவமனைகளில் பயன்படுத்தப்பட்ட ஆன்டிபயாட்டிக் மாத்திரைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டன.

அந்த ஆய்வறிக்கையில், கடந்த 2019ஆம் ஆண்டு தனியார் மருத்துவமனைகளில், இந்திய அரசு உரிய அங்கீகாரத்துடன் வழங்கும் ஆன்டிபயாட்டிக் மாத்திரைகள் 49 விழுக்காடும், மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு ஆணையத்தால் அங்கீகரிக்கப்படாத ஆன்டிபயாட்டிக் மாத்திரைகள் 47.1 விழுக்காடும் பயன்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அங்கீகரிக்கப்படாத ஆன்டிபயாட்டிக் மாத்திரைகளில், செஃபாலோஸ்போரின்ஸ், மேக்ரோலைட்ஸ், பென்சிலின் ஆகியவை அதிகளவு பயன்படுத்தப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Categories

Tech |