தானேவில் டிவியை ஆஃப் செய்ததற்காக மாமியாரின் மூன்று விரல்களை மருமகள் கடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மஹாராஷ்டிரா மாநிலம், தானேவில் 60 வயது மதிக்கத்தக்க மாமியார் ஒருவர், இரவு நேரத்தில் வழக்கம்போல், தெய்வ வழிபாடு நடத்திகொண்டு கீர்த்தனை பாடிகொண்டிருந்தார். அப்போது, அவரது மருமகள் தொலைக்காட்சியில் சத்தம் அதிகம் வைத்து சீரியல் பார்த்துகொண்டு இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் மாமியார் தனது மருமகளிடம் ஒலியைக் குறைக்கச் சொல்லியும், ஆனால் அவர் மறுத்துவிட்டார்.
இதனால், கோபமடைந்த மாமியார் டிவியை ஆஃப் செய்தார். இதனால் மாமியார் மற்றும் மருமகள் இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது. கோபத்தில் மாமியாரின் வலது கையின் மூன்று விரல்களை மருமகள் கடித்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, மருமகள் மீது அம்பர்நாத்தில் உள்ள சிவாஜி நகர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும், ஆனால் இதுதொடர்பாக அவர் இன்னும் கைது செய்யப்படவில்லை என்றும் காவல்துறை அதிகாரி தெரிவித்துள்ளனர்.