இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலும் அனைவரும் தங்களுடைய வீடுகளில் நாய் பூனை போன்ற ஏதாவது ஒரு செல்லப்பிராணிகளை வளர்த்து வருகிறார்கள். தங்கள் வீட்டில் ஒருவரை போலவே இந்த நாய்களை பராமரித்து வருவார்கள். சில சமயங்களில் இந்த எதிர்பாராத விதமாக நீண்ட தூரத்துற்கு செல்லும் நிலை ஏற்படும் போது தங்கள் ஆசையாக வளர்த்த செல்ல பிராணியை வீட்டில் விட்டு செல்ல வேண்டிய நிலை ஏற்படும். நம்முடன் அழைத்து செல்ல வேண்டும் என்று நினைத்தாலும் சில போக்குவரத்து சேவை செல்ல பிராணிகளை உடன் அழைத்து செல்ல அனுமதிப்பதில்லை.
இந்நிலையில் செல்லப்பிராணிகளுடன் ரயில்களில் பயணம் செய்யலாம் என்று இந்திய ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதன்படி நாய், பூனை உள்ளிட்ட செல்ல பிராணிகளுடன் ரயில்களில் ஏசி முதல் வகுப்பு மற்றும் நான்கு இருக்கைகள் கொண்ட கேபின் உள்ள பெட்டிகளில் மட்டும் முன்பதிவு செய்து பயணிக்கலாம். மேலும் பெட்டியில் செல்ல பிராணிகளை எடுத்துச் சென்றால் கிலோவுக்கு 30 ரூபாய் மற்றும் உடன் அழைத்துச் சென்றால் கிலோவுக்கு அறுபது ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.