Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

நாளை இந்த மாவட்டத்திற்கு….. உள்ளூர் விடுமுறை….. வெளியான அதிரடி அறிவிப்பு….!!!!

திண்டுக்கல் மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் மாரியம்மன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவில். 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த கோவிலில் கும்பாபிஷேக விழா நடத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி ஜூன் மாதம் 27ஆம் தேதி பாலாலயா பூஜைகள் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து கோபுர உச்சியில் உள்ள சிலைகள், பிரகாரம் அனைத்தும் வர்ணம் பூசும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்றது.

இந்நிலையில் நத்தம் மாரியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் நாளை காலை 11 மணி முதல் 12 மணிக்குள் நடைபெற உள்ளது. இந்த விழாவை முன்னிட்டு நாளை திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். இந்த விடுமுறையை ஈடு செய்யும் வகையில் சனிக்கிழமை அரசு அலுவலகங்கள், அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் வேலை நாளாக செயல்படும் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |