ஆகஸ்ட் 22ஆம் தேதி காலை நாகை மாவட்டம் அக்கரைப்பட்டியில் இருந்து 10 பேர் கொண்ட மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்குள் சென்றுள்ளனர். கடலில் மீன் பிடித்து கொண்டிருந்தபோது அங்கு வந்த இலங்கை கடற்பறையினர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி அக்கறை பேட்டை மீனவர்கள் 10 பேரை கைது செய்துள்ளனர். மேலும் அவர்களின் படகுகளையும் பறிமுதல் செய்து திருகோணமலை கடற்படை முகாமிற்கு அழைத்து சென்றுள்ளனர். அதன் பின் கைது செய்யப்பட்ட மீனவர்கள் 10 பேரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தியுள்ள நிலையில் அவர்களை செப்டம்பர் 6ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. இதே போல் ஆகஸ்ட் 6ஆம் தேதி கீச்சாங்குப்பத்தைச் சேர்ந்த 9 பேர் நாகை துறைமுகத்திலிருந்து மீன்பிடிக்க கடலுக்குள் சென்றுள்ளனர்.
இந்த நிலையில் கோடியக் கரைக்கு தென்கிழக்கு நடுகடலில் மீன் குடித்துக் கொண்டிருந்தபோது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தெரிவித்து அக்கரை பேட்டை திடீர் குப்பத்தைச் சேர்ந்த 9 பேரை கைது செய்து அவர்களின் விசைப்படகுகளையும் பறிமுதல் செய்திருக்கின்றனர். அதன்பின் கைதான மீனவர்கள் திரிகோணமலை கடற்படை முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ள நிலையில் அவர்களுக்கு ஆகஸ்ட் 26 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கின்றது. அதன்படி கடந்த ஆறாம் தேதி கைது செய்யப்பட்ட மீனவர்கள் 9 பேரில் நீதிமன்ற காவல் முடிவடைந்துள்ள நிலையில் அவர்களை திரிகோணமலை நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது. இந்த சூழலில் கடந்த மாதம் 22ஆம் தேதி கைது செய்யப்பட்ட நாகை மீனவர்கள் 10 பேரில் நீதிமன்ற காவல் இன்றுடன் முடிவடைந்த நிலையில் அவர்களையும் விடுதலை செய்ய இலங்கையின் திரிகோணமலை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து இருக்கிறது.