உத்திரபிரதேசத்தை சேர்ந்த ஓம் பிரகாஷ் என்ற 40 வயது முதியவர் தான் உயிரோடு தான் இருக்கிறேன் என்பதை நிரூபிக்க போராடி வருகிறார்.
உத்தர பிரதேசத்தை சேர்ந்த ஓம்பிரகாஷ் என்ற 40 வயது முதியவர் இறந்துவிட்டதாக ஒரு ஆண்டுக்கு முன்பு அரசு ஆவணங்களில் தவறாக பதிவாகியுள்ளது. இதனால் முதியோர் உதவி தொகை, வங்கி கணக்கில் உள்ள தனது சேமிப்பு பணத்தை எடுக்க முடியாமல் அவர் தவித்து வருகிறார். இதனால் செலவுக்கு கூட பணம் இல்லை என்று கூறியுள்ளார். மேலும் வங்கிக்கு சென்றால் நான் இறந்து விட்டேன் என்று என்னிடமே தெரிவிக்கிறார்கள். நான் உயிருடன் இருப்பதை நிரூபிக்க கடந்த ஓராண்டாக போராடி வருகிறேன் என்று ஓம் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து விசாரணை நடத்த அரசு அதிகாரிகள் குழு ஒன்று அமைக்கப்பட்டதாகவும் அந்த குழு எதுவும் இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று தெரிவித்துள்ளார். இவரின் சோக கதையை கேட்டு அவர் தற்போது வசிக்கும் தில்கர் பகுதி தாசில்தார் ஞானேந்திர சிங் ஓம் பிரகாஷின் கிராமத்துக்கு சென்று விசாரணை நடத்தி தவறு சரி செய்யப்படும் என்று உறுதி அளித்தார். இதைத்தொடர்ந்து தனது பிரச்சினை விரைவில் தீர்ந்துவிடும் என்று நம்புவதாக ஓம் பிரகாஷ் தெரிவித்தார்.