Categories
தேசிய செய்திகள்

மாணவியின் கழுத்தை அறுத்து ஆசிட் வீச்சு…. மாமனின் கொடூர செயல்…. பெரும் பரபரப்பு சம்பவம்….!!!!

சிறுமியின் கழுத்தை அறுத்து ஆசிட் வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலத்தில் உள்ள நெல்லூர் பகுதியில் 9-ம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் வசித்து வருகிறார். இவருடைய மாமா நாகராஜ் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சி செய்துள்ளார். அப்போது சிறுமி கத்தியதால் ஆத்திரத்தில் நாகராஜ் சிறுமியின் கழுத்தை அறுத்து ஆசிட் வீசி விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். அதன் பின் அருகில் இருந்தவர்கள் சிறுமியை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

அங்கு சிறுமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக இருக்கும் நாகராஜை வலைவீசி தேடி வருகின்றனர். மேலும் சிறுமியின் கழுத்தை அறுத்து ஆசிட் வீசிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |