திருத்தணியில் இன்று சுப முகூர்த்தம் என்பதால் நூறுக்கும் மேற்பட்ட ஜோடிகளுக்கு திருமணம் நடந்ததால் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருத்தணி முருகன் கோவிலில் திருமண கோலத்தில் இருக்கும் முருகன் பெருமானை திருமணம் ஜோடிகள் அதிக அளவில் வந்து தரிசனம் செய்கின்றார்கள். மேலும் முகூர்த்த தினங்களில் கோவிலில் கூட்டம் அலைமோதுகின்றது.
இந்நிலையில் இன்று சுப முகூர்த்தம் என்பதால் கோவிலில் 30க்கும் மேற்பட்ட ஜோடிகளுக்கு திருமணம் நடந்தது. மேலும் கோவிலை சுற்றியுள்ள 70 மண்டபங்களில் திருமணம் நடைபெற்றது. இதனால் திருமண கூட்டங்கள் பேருந்து, கார் உள்ளிட்டவற்றில் குவிந்ததால் திருத்தணியில் பல இடங்களில் கடும் போக்குவரத்து நெரிசலுக்கு உள்ளானது. மேலும் கோவிலிலும் ஒரே நேரத்தில் குவிந்ததால் கடும் நெரிசல் ஏற்பட்டது.