அளவுக்கு அதிகமாக மது குடித்ததால் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள கோனமாக்கனப்பள்ளி கிராமத்தில் எல்லப்பா(33) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று முன்தினம் இரவு நேரத்தில் வீட்டை விட்டு வெளியே சென்ற எல்லப்பா நீண்ட நேரமாகியும் திரும்பி வரவில்லை. இதனால் உறவினர்கள் அவரை தேடி அலைந்தனர். அப்போது பூதட்டிகொட்டாய் பேருந்து நிறுத்தம் அருகே எல்லப்பா இறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்த உறவினர்கள் போலீசருக்கு தகவல் தெரிவித்தனர்.
அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் வாலிபரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்கு பதிந்த போலீசார் நடத்திய விசாரணையில் அளவுக்கு அதிகமாக மது குடித்ததால் எல்லப்பா இறந்தது தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.