Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

விருந்துக்கு சென்ற தொழிலாளர்கள்…. சரக்குவேன் கவிழ்ந்து இளம்பெண் பலி; 16 பேர் படுகாயம்…. கோர விபத்து…!!

சரக்கு வாகனம் கார் மீது மோதி கவிழ்ந்த விபத்தில் இளம்பெண் பலியான நிலையில், 16 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள புதுகொத்துக்காடு பகுதியில் வசிக்கும் 16 கட்டிட தொழிலாளர்கள் ராஜன் நகரில் நடைபெற்ற விருந்து நிகழ்ச்சிக்கு சரக்கு வேனில் சென்றுள்ளனர். அங்கு நிகழ்ச்சி முடிந்ததும் தொழிலாளர்கள் அதே வாகனத்தில் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தனர். இந்த வேனை சல்மான் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் தாண்டம்பாளையம் அருகே சென்றபோது எதிர்பாராதவிதமாக ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த சரக்கு வேன் சாலையோரம் நின்ற கார் மீது மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் கவிதா என்பவர் வாகனத்தின் அடியில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனை அடுத்து டிரைவர் உள்பட 16 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இளம் பெண்ணின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |