Categories
தேசிய செய்திகள்

பள்ளி கழிவறையில் சிகரெட்….! “10ம் வகுப்பு மாணவிகளின் அட்டகாசம்”….. நேரில் பார்த்த மாணவிக்கு நேர்ந்த கொடுமை….!!!!

பள்ளி கழிவறையில் சிகரெட் ஊதி தள்ளிய பத்தாம் வகுப்பு மாணவிகளை கையும் களவுமாக பிடித்துள்ளனர். கேரள மாநிலத்தில் தற்போது ஓணம் பண்டிகை கலை கட்டியுள்ளது. பள்ளி, கல்லூரிகளில் ஓணம் விழா கொண்டாடப்பட்டு வருகின்றது. கொல்லம் நகர் பகுதியில் பிரபல அரசு பெண்கள் பள்ளியில் நேற்று முன்தினம் ஓனம் திருவிழா கொண்டாடப்பட்டது. மாணவிகள் பல வண்ண மலர்களால் கோலமிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். மாலை 4 மணி அளவில் ஏழாம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் பள்ளி கழிவறைக்கு சென்றபோது அங்கு பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவிகள் நான்கு பேர் நின்று சிகரெட் பிடித்துக் கொண்டிருந்தன.

நான்கு பேரும் மாற்றி மாற்றி சிகரெட் பிடித்துக் கொண்டிருந்ததை பார்த்த ஏழாம் வகுப்பு மாணவி அதிர்ச்சி அடைந்தார். மற்றொரு மாணவி தங்களை பார்த்து விட்டாரே என்று அந்த மாணவிகள் பதட்டம் அடைந்தனர். இந்த விஷயத்தை யாரிடம் கூறக்கூடாது என ஏழாம் வகுப்பு மாணவியை மிரட்டியுள்ளனர். யாரிடமும் அவர் சொல்லிவிடக்கூடாது என்ற அச்சத்தில் மாணவியின் தலைமுடியை கத்திரிக்கோல் எடுத்து வெட்டியுள்ளனர். அவர்களிடமிருந்து தப்பிச் சென்ற மாணவி தலைமை ஆசிரியரிடம் புகார் அளித்தார். புகாரின் பெயரில் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் பள்ளிக்கு நேரில் வந்து விசாரணை செய்தனர். மேலும் கல்வி அதிகாரிகளும் விசாரணையில் ஈடுபட்டன. விசாரணைக்கு பின் சம்பந்தப்பட்ட பத்தாம் வகுப்பு மாணவிகள் நான்கு பேர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்..

Categories

Tech |