Categories
உலக செய்திகள்

பாகிஸ்தானில் கடும் வெள்ளம்… முகாம்களில் தங்கவைக்கப்பட்ட கர்ப்பிணி பெண்கள்…!!!

பாகிஸ்தான் நாட்டில் வெள்ளத்தால் பாதிப்படைந்த பகுதியை சேர்ந்த 47 ஆயிரம் கர்ப்பிணி பெண்கள் முகாம்களில் தங்கியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் நாட்டில் சமீப நாட்களாக பலத்த மழை தொடர்ந்து கொட்டி தீர்த்து கொண்டிருக்கிறது. எனவே, பல பகுதிகள் வெள்ளத்தால் பாதிப்படைந்துள்ளது. இதில் மூன்று கோடிக்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், 5 லட்சத்திற்கும் மேற்பட்டோர் நிவாரண முகாம்களில் தங்கியிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சிந்த் மாகாணத்தின் வெளியிடப்பட்ட புள்ளி விவரங்களின் படி, வெள்ளம் உருவான பிறகு லட்சக்கணக்கான மக்களுக்கு பல விதமான நோய்கள் ஏற்பட்டிருக்கிறது. ஒன்றரை லட்சம் மக்களுக்கு வயிற்றுப்போக்கு ஏற்பட்டிருக்கிறது.

44 ஆயிரம் மக்கள் மலேரியா நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வெள்ளம் அதிகமாக சூழ்ந்திருக்கும் பகுதியிலிருட்னது சுமார் 47 ஆயிரம் கர்ப்பிணி பெண்கள் பாதுகாப்பாக முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருக்கிறார்கள்.

Categories

Tech |