கோலிவுட்டில் மிகவும் பிரபலமான நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் விஜய் தேவர் கொண்டா. இவர் 2011 ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான நுவ்விலா என்ற திரைப்படத்தின் மூலம் சினிமா உலகிற்கு அறிமுகமானார். இருந்தாலும் அவருக்கு வெற்றி வாய்ப்பை தேடிக் கொடுத்த படம் அர்ஜுன் ரெட்டி. இதன் தொடர்ச்சியாக இவரின் நடிப்பில் வெளியான கீதா கோவிந்தம் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதால் தென்னிந்திய முழுவதும் பிரபலமானார். தற்போது இவர் நடித்திருக்கும் படம் லைகர்.
இந்தத் திரைப்படம் சமீபத்தில் வெளியான நிலையில் படத்தின் தோல்வியால் சம்பளத்திலிருந்து ஆறு கோடியை விஜய் தேவரகொண்டா திருப்பி கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அவர் படத்திற்கு 20 கோடி சம்பளம் வாங்கியுள்ளார். மேலும் அடுத்த படத்திலும் இதே இயக்குனருடன் அவர் பணிபுரிய உள்ளதால் அந்த படத்திற்கும் சம்பளம் வேண்டாம் என்று கூறியுள்ளார். படம் வெற்றி பெற்றால் அதிலிருந்து ஷேர் பெற்றுக் கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. இவரின் இந்த திடீர் முடிவு ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.