அம்மன் கோவிலில் நடைபெற்ற தீமிதி திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மன்னார்குடி பாமணி ஆற்றின் கீழ் கரையில் அக்கரை மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்நிலையில் ஆவணி மாத ஞாயிற்றுக்கிழமையில் ஆண்டுதோறும் இந்த கோவிலில் தீமிதி திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு விழா நேற்று நடந்தது. எனவே அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை செய்யப்பட்டு மலர்களால் அலங்கரித்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதனையடுத்து கோவில் வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த தீக்குண்டத்தில் திரளான பக்தர்கள் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.