தமிழகத்தில் சிறுபான்மை இன மாணவ, மாணவிகள் கல்வி படிப்பை மேற்கொள்வதற்கு அரசு பல்வேறு நலத்திட்டங்களை அறிமுகப்படுத்திக் கொண்டிருக்கிறது. அந்த வகையில் சிறுபான்மை இன மாணவ மாணவிகளுக்கு கல்வித்தொகை குறித்து அறிவிப்பை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டு இருக்கிறார். இந்த அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது, அரசு உதவி பெறும் மத்திய மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் கல்வி நிலையங்களில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகின்றது. மேலும் இந்த உதவித்தொகை நடப்பு கல்வியாண்டில் ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவிகளுக்கு பள்ளி படிப்பிற்காக கல்வி உதவித்தொகை வழங்கப்பட இருக்கின்றது. இதே போல் 11 ம் வகுப்பு 12ஆம் வகுப்பு, ஐஐடி, ஐடிசி, வாழ்க்கை தொழிற்கல்வி, பாலிடெக்னிக், செவிலியர், ஆசிரியர் பட்டப்படிப்பு, இளங்கலை, முதுகலை பட்டப்படிப்புகள் போன்ற படிப்பை பயிலும் மாணவர்களுக்கு பள்ளி மேற்படிப்புக்காக கல்வி உதவித்தொகை வழங்கப்படுகின்றது.
இதே போல தொழில் கல்வி மற்றும் தொழில்நுட்ப கல்வி படிப்பை மேற்கொள்பவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்படும். மேலும் இவர்களுக்கு தகுதி மற்றும் வருவாய் அடிப்படையில் உதவி தொகை வழங்கப்படுகின்றது. இந்த உதவித்தொகை பெற விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் மத்திய அரசின் தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். அத்துடன் பள்ளிப்படிப்பு உதவி தொகை திட்டத்திற்கு வருகின்ற செப்டம்பர் 30-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இதே போல பள்ளி மேற்படிப்பிற்கான உதவித்தொகை அக்டோபர் மாதம் 31ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இது தொடர்பான கூடுதல் தகவல்களை பெற மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் தொடர்பு கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.