Categories
மாநில செய்திகள்

அப்படி போடு போடு!…. சரக்கடித்து சாலையில் குத்தாட்டம் போட்ட முதியவர்… பின் நடந்த பரபரப்பு சம்பவம்….!!!!

ராமநாதபுரம் புது பேருந்து நிலையம் அருகே வழிவிடு முருகன் கோவில் சந்திப்பு இருக்கிறது. இதன் வழியாக மாலை நேரத்தில் பள்ளிகுழந்தைகள் மற்றும் வேலைக்கு சென்றுவிட்டு வீடு திரும்புவோர் என பலரும் கடந்து செல்வதால் அந்த சாலை பரபரப்பாக காணப்படும். இந்த நிலையில் நேற்று மாலை முதியவர் ஒருவர் மதுபோதையில் வழிவிடு முருகன் கோவில் சந்திப்பு நடுரோட்டில் நின்றுகொண்டு வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களுக்கு இடையூறாக ரகளையில் ஈடுபட்டார். கோவில் அருகிலுள்ள அரசு மதுபானக் கடையில் அடித்த சரக்கால் போதை தலைக்கெறிய முதியவர், அவ்வழியாக போகும் வாகனங்களை வழிமறித்து “நான் ராஜாதி ராஜன்டா முடிஞ்சா அடிச்சு பாருடா” என வசனம் பேசியதுடன், கெட்ட வார்த்தைகளால் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகளை வசை பாடினார்.

ஒருக்கட்டத்தில் போதையின் உச்சத்திற்கே சென்ற முதியவர் தான் என்ன செய்கிறோம் என தெரியாமல் அவ்வழியாக வந்த அரசு விரைவு பேருந்தை நிறுத்தியதோடு, என்னை ஏத்திட்டு ஒரு எட்டு போய்ருவிய்யா. எங்க என்ன ஏத்திபாரு என திமிருதனமாக பேசினார். எனினும் வயது மூப்பின் காரணமாக வாகன ஓட்டிகள் யாரும் மது போதையில் இருந்த முதியவரை கண்டிக்காமல் கடந்து சென்றனர். தலைக்கேறிய போதை குறையததால் தொடர்ந்து அரைமணி நேரத்திற்கு மேலாக முதியவர் சாலையில் செல்வோரை வம்பிழுத்து சடுகுடு ஆட்டம் ஆடிவந்தார்.

இதை கவனித்து கொண்டிருந்த அப்பகுதியை சோந்த ஒருவர் மது போதையில் ரகளை செய்து கொண்டிருந்த முதியவரின் கையை பிடித்து தரதரவென நடுரோட்டில் இருந்து இழுத்து வந்து சாலை ஓரம் விட்டார். அதன்பின் அந்த நபர் முதியவருக்கு போதை தெளியவேண்டும் என்பதற்காக பேக்கரியில் டீ வாங்கி கொடுத்தார். இருப்பினும் போதையில் தள்ளாடிய முதியவரால் டீ கப்பை பிடித்து குடிக்க கூட முடியவில்லை. அத்துடன் போதை தலைக்கேறிய முதியவர் சாலையில் விழுந்து படுத்தேவிட்டார். இவ்வாறு போதை முதியவரின் அலப்பறையால் அந்த வழியாக சென்ற பொதுமக்கள் இடையூறுக்கு ஆளாகினர். முக்கியமான சந்திப்பான வழிவிடு முருகள் கோவில் அருகில் பாதுகாப்பு பணியில்  காவல்துறையினர் இருந்திருந்தால், முதியவரை ஆரம்பத்திலேயே அங்கிருந்து அப்புறபடுத்தி இருக்க முடியும் என பொதுமக்கள் புலம்பி சென்றனர்.

Categories

Tech |