உக்ரைன் நாட்டைச் சேர்ந்த புகைப்பட பத்திரிக்கையாளர் எவ்ஜெனி மலோலெட்கா என்பவர் விசா டி ஓர் பரிசை வென்று இருக்கின்றார். இந்த விருது மிகவும் மதிப்பு மிக்க விருதுகளில் ஒன்றாக விளங்குகின்றது. சர்வதேச புகைப்பட இதழியல் திருவிழா ஆகஸ்ட் 27ஆம் தேதி அன்று தொடங்கி உள்ளது. அதில் உக்ரைன் போர் மைய பொருளாக விளங்குகின்றது. தெற்கு பிரான்சின் வெர்பிகன் நகரில் நடைபெற்ற இந்த விழாவில் இந்த விருந்துக்கு பரிந்துரைக்கப்பட்ட மற்ற இரண்டு புகைப்படக்காரர்கள் மார்க்கஸ் யாம் மற்றும் உக்ரேனிய வம்சாவளியை சேர்ந்த ஆஸ்திரேலியரான டேனியல் பெரெஹூலக் போன்றோர் ஆவர். 35 வயதான பத்திரிகையாளர் எவ்ஜெனி அசோசியேடெட் பிரஸ் நிறுவனங்களில் பணியாற்றி வருகின்றார். அவர் இந்த விருதை வென்று உக்ரேனிய மக்களுக்கு தனது பரிசை அர்ப்பணித்துள்ளார்.
ரஷ்ய படைகள் மரியு போல் நகரை முற்றுகையிட்டபோது அங்கு கள நிலவரத்தை பிரதிபலித்த அவரது சிறந்த பணிக்காக இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. மேலும் ரஷ்யப்படைகள் உக்ரேனில் தாக்குதல் தொடங்கும் முன்னர் பிப்ரவரி 23 அன்று மரியு போல் நகருக்குள் நுழைந்த முதல் பத்திரிகையாளர்களில் எவ்ஜெனி ஒருவராவர். இந்த நிலையில் அவரது சக வீடியோ பத்திரிக்கையாளர் மிஸ்டிஸ்லாவ் செர்னோவ் உடன் இணைந்து மரியுபோல் சென்றுள்ளார். அதன் பின் அங்கிருந்து கடைசியாக வெளியேறியவர்களில் அவரும் ஒருவராகின்றார். இறுதியாக மார்ச் 15ஆம் தேதி அந்த நகரத்தை விட்டு வெளியேறியுள்ளார். அந்த சமயம் ரஷ்ய குண்டுவெடிப்பு தாக்குதலால் மரியு போல் முற்றிலும் அழிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அவர் அங்கு கழித்த 20 நாட்கள் ஒரு நீண்ட முடிவில்லாத நாட்கள் போல் மோசமாகி கொண்டே இருந்தது என அவர் தெரிவித்துள்ளார். மேலும் அவரது படங்கள் மரியுபோலில் நடந்த மோதலில் முழு கொடூரத்தையும் காட்டியுள்ளது. அவரது படங்கள் முற்றுக்கையின் போது கொல்லப்பட்ட குழந்தைகள் குண்டு வெடித்த கட்டிடங்களின் ஈடுபாடுகளுக்குள் மத்தியில் அதிக கர்ப்பிணி பெண்கள் கிடப்பதை உலகிற்கு காட்டியது குறிப்பிடத்தக்கதாகும்.