Categories
உலக செய்திகள்

திடீர் எரிபொருள் கசிவு….ராக்கெட் ஏவும் முயற்சி ஒத்திவைப்பு… விரைவில்அப்டேட் வெளியாகும் நாசா அறிவிப்பு…!!!!!!!

நாசா மீண்டும் மனிதர்களை நிலவுக்கு அனுப்புவதற்கான ஆர்டெமிஸ் திட்டத்தை தொடங்கி இருக்கின்றது. 2025 ஆம் வருடத்திற்குள் மனிதர்களை நிலவுக்கு அனுப்பத் திட்டமிட்டு இருக்கின்ற நாசா தற்போது ஆர்டெமிஸ் 1 ஒன் ராக்கெட்டை நிலவு குறித்து ஆராய்ச்சிக்காக அனுப்பி இருக்கின்றது. ஆர்டெமிஸ்-1 சுமார் 1.3 மில்லியன்  தூரம் பயணம் மேற்கொள்ளும். நிலவின் மேற்பரப்பில் இருந்து 60 மைல்களுக்கு அருகில் ஓரியன் வின்கலத்தை பறக்க நாசா திட்டமிட்டு இருக்கிறது. கடந்த 29ஆம் தேதி இந்திய நேரப்படி மாலை 6 மணி அளவில் ராக்கெட்டை விண்வெளிக்கு அனுப்பும் பணி தொடங்க திட்டமிடப்பட்டிருந்தது. கென்னடி விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் இருந்து இந்த விண்கலம் புறப்படுவதற்கான கவுண்டவுன் தொடங்கப்பட்டுள்ளது. அப்போது எதிர்பாராத விதமாக சில தொழில்நுட்ப கோளாறுகள் ஏற்பட்டதனால்  40 வது நிமிடத்தின் போது கவுண்டவுன் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து தொழில்நுட்பக் கோளாறு சரி செய்யப்பட்டு இன்று இரவு ராக்கெட் விண்ணில் ஏவப்படும் என நாசா அறிவித்துள்ளது. இந்த சூழலில் ராக்கெட்டில் இருந்து எரிபொருள் கசிவு ஏற்படுவதை பொறியாளர்கள் கண்டுபிடித்து இருக்கின்றனர். அதி குளிர் திரவ ஹைட்ரஜன் உள்ளே செலுத்தப்பட்டால் ராக்கெட்டின் அடிப்பகுதிக்கு அருகில் கசிவு கண்டறியப்பட்டுள்ளது. மேலும் பொறியாளர்கள் எரிபொருள் கசிவை கண்டறிந்த உடனே ராக்கெட்டின் நான்கு முக்கிய எஞ்சின்களில் ஒன்று மிகவும் சூடாக இருப்பதை சென்சார் காட்டியதும் ஆரம்ப ஏவுதல் முயற்சி நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் ராக்கெட் ஏவு முயற்சி ஒத்திவைக்கப்பட்டு இருப்பதாக நாசா தெரிவித்துள்ளதும் மேலும் ராக்கெட்டை ஏவுதல் தொடர்பான அப்டேட் விரைவில் கூறப்படும் என நாசா தெரிவித்துள்ளது. இந்த நிலையில் நாசா ராக்கெட்டை ஏவும் முயற்சியை ஒத்தி வைத்திருக்கின்ற நிலையில் அடுத்த ராக்கெட்டை ஏவுவதற்கான சாதகமான சூழல் வரும் திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமை இருக்கின்றது. ஒருவேளை இந்த இரண்டு தினங்களிலும் ராக்கெட்டை ஏவ முடியவில்லை என்றால் நிலவின் சுற்றுப்பாதை நிலை காரணமாக செப்டம்பர் 19ஆம் தேதி வரை காத்திருக்கும் சூழ்நிலை உருவாகின்றது.

Categories

Tech |