திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருகின்ற 27ஆம் தேதி முதல் அக்டோபர் மாதம் 5ஆம் தேதி வரை பிரம்மோற்சவ விழா நடைபெற உள்ளது. கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா காரணமாக இந்த விழா நடைபெறாமல் இருந்த நிலையில் இரண்டு வருடங்களுக்குப் பிறகு தற்போது நடைபெற உள்ளது.அதனால் பிரமோற்ச விழாவில் கலந்து கொள்ள ஏராளமான பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் திருப்பதி பிரமோற்சவ விழாவை முன்னிட்டு பெருமாளை தரிசனம் செய்ய தமிழகத்திலிருந்து 150 சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட உள்ளன. சென்னை, சேலம் மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய நகரங்களில் இருந்து திருப்பதிக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன . சென்னையில் இருந்து மட்டும் 85 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.