பிரபல சாமியாராக நித்யானந்தா மீது பாலியல் பலாத்கார வழக்கு உட்பட பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதன் காரணமாக தீவிரமாக தேடப்பட்டு வரும் அவர் கடந்த 2018 ஆம் ஆண்டு இந்தியாவில் இருந்து தப்பி கைலாசாவின் வசித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.இதனிடையே நித்தியானந்தா உடல் நிலை மிகவும் மோசமான நிலையில் இருப்பதாக செய்தி வெளியாகியது .
தற்போது மருத்துவ சிகிச்சைக்காக அடைக்கலம் வழக்குமாறு,இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு நித்தியானந்தாவின் சீடர்கள் தரப்பில் கடிதம் எழுதப்பட்டுள்ளது. அந்த கடிதத்தில், ஸ்ரீ நித்யானந்தா பரமசிவனுக்கு உடனடி மருத்துவ உதவி தேவைப்படுகிறது. கைலாசாவில் அவருக்கு போதிய சிகிச்சை அளிக்க முடியவில்லை.அவருக்கு ஏற்பட்டுள்ள உடல்நிலை குறைபாட்டை சரி செய்ய இலங்கையில் தஞ்சம் அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.