தமிழகத்தில் விநாயகர் சிலை கரைப்பு ஊர்வலத்தின் போது பட்டாசுகள் வெடிக்க கூடாது என பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்து அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழக முழுவதும் பல்வேறு இடங்களில் நாளை விநாயகர் சிலை கரைப்பு ஊர்வலம் நடைபெற உள்ளது. இந்நிலையில் ஊர்வலத்தின் போது பட்டாசுகள் வெடிக்க கூடாது,மதவாத வெறுப்புணர்ச்சியை தூண்டும் வகையில் மற்றும் பிற மதத்தினர் உணர்வுகளை துன்புறுத்தும் வகையில் முழக்கம் இடக்கூடாது.அனுமதி வழங்கிய பாதையில் மட்டுமே சென்று சிலைகளை கரைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு புதிய கட்டுப்பாட்டை தமிழக காவல்துறை விதித்துள்ளது.மேலும் விநாயகர் சிலை கரைப்பின் போது பிரச்சனையில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளது.
Categories
BREAKING: தமிழகம் முழுவதும் புதிய கட்டுப்பாடு…. அரசு திடீர் எச்சரிக்கை…..!!!!
